Wednesday, January 2, 2013

அழகு




நிலவே!
நீ என்ன சிறுகுழந்தையா?
மாதத்திற்கு இருமுறை
கண்ணாம்பூச்சி விளையாடுகிறாயே?
பழகிய நண்பர்களை தொலைத்து
பாலை தேசத்தில் வசிக்கும்
எனக்கு தனிமையைத்
தந்து விடாதே!
நீ
எனக்கு வேண்டும்
இருளினை நீக்கி
ஒளியினைத்
தருவதற்க்கு அல்ல
அழும் குழந்தைகளுக்குத்
தாய்ப்பால் ஊட்டுவதுபோல
தளரும் வேளையில்
தன்னம்பிக்கையூட்ட

No comments:

Post a Comment