Monday, December 31, 2012

புத்தாண்டே வருக...!

அண்டமெங்குமே கொண்டாட்டம்
இன்று
பூமி புதிதாய் சுற்றத் தொடங்குதே.
.
அழகான சிறகு முளைத்து
உலகு பறக்குதே
கலைப் பண்டமாய்.
.
எங்கும் மழை
இனிதாய்ப் பொழிய
மேகக் கூட்டங்கள்
பரவிட வேண்டும்.
.
ஆறுகள் நிரம்பியெங்கும்
அளவாய்ப் பாய
பூமித் தாய் சிரிக்கும்
குதூகலமாக.
.
உள்ளங்கள் இனி
மகிழட்டும்..
இதயங்கள் இனிதாகத்
துடிக்கட்டும்.
.
தென்றல் வீசிடும்
அலைகள் எழும்பிடும்
இயற்கையெல்லாம் நன்றாய்க்
கவி சொல்லிடுமே..

பூமி புதிதாய்
சுழலத் தொடங்குதே
எம் கவலை மெதுவாய்
விலகி அடங்குதே..

அழகிய பூவாய்
அண்டத்திலே பூப்பாயோ.
.
இவ்வுலகே ஒரு
கலைப் பண்டமாகட்டும்.
.
துண்டுதுண்டாகிய
உள்ளங்களெல்லாம்
ஒன்றாய் சேரட்டும்...

நிலவு வந்து சிரிக்கட்டும்
நீரலைகள் பாடட்டும்
நினைப்பதெல்லாம் நலமாக
இனி எப்பொழுதும் ஆகட்டும்.
.
அழுத கண்ணீர் காயும் முன்
இடிவந்து வீழ்ந்ததெல்லாம்
கடல் நீரில் கரைந்து போகும் சிறு பனித்துண்டு ஆகட்டுமே..
.
காண்பதெல்லாம் சுகமாக
ஆயுள் வரை தொடர வேண்டும்..

கனிவாக வாழ்த்துப்பா
நீ இசைக்கின்றாய்,
கேட்கின்றதே..!

உண்மையென்ற அச்சு கொண்டு
உலகு இனி சுழல வேண்டும்
நியாயங்கள் பெருகியெங்கும்
நீதி நிலைத்திட வேண்டும்.
.
உண்மை பேசிடும்
உதட்டைப் பெறுங்கள் -
நன்மை செய்திடும்

'கரங்கள்' ஆகுங்கள் -
இதயம் சிறந்திட

சிந்தை செய்யுங்கள் -
சாதிபேதங்கள் இனியும் வேண்டாம்
நீதி கொண்டே எதையும்

சாதியுங்கள் -
சாந்தமாகவே சுற்றும் பூமி
இனி நாளைய சரித்திரங்கள்
சொல்லும் மீதி..!

No comments:

Post a Comment